×

பாலியல் குற்றங்கள் அமைரா ஆவேசம்

மத்திய பிரதேசம் நர்சிங் புர்ரை சேர்ந்த பெண், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதுதொடர்பாக நர்சிங்புர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைப் பெற போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2ம் தேதி அந்தப் பெண் தன் வீட்டில் தூக்கில் தொங்கிய  நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகையும், தனுஷ் ஜோடியாக அனேகன் என்ற தமிழ் படத்தில் நடித்தவருமான அமைரா தஸ்துர், ஆவேசமாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘ வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒரு பெண் இறக்க வேண்டுமா? திடீரென்று இந்தியாவுக்கு என்னதான்  ஆகிவிட்டது? போலீசாரால் ஏன் நம்மை பாதுகாக்க முடியவில்லை? பாலியல்  வன்கொடுமைகள் என்பது ஏன் நிலையான, தொடர்ச்சியான குற்றமாக மாறியது? பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்துக்  கொண்டே செல்கிறது? பெண்களை துன்புறுத்த ஆண்கள் ஏன்  பயப்படுவது  இல்லை?’ என்று, சரமாரி கேள்விகள் கேட்டுள்ளார்.

Tags : Amira ,
× RELATED வெப்சீரிஸில் அமைரா தஸ்தூர்